தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான அளவு ஆக்சிஜன், தடுப்பூசி கையிருப்பில் உள்ளது : மாவட்ட ஆட்சியர்
Apr 21 2021 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 7 ஆயிரத்து 500 யூனிட் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக குறிப்பிட்டார்.