மயிலாடுதுறையில் உள்ள வைத்தீஸ்வரன் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Apr 21 2021 2:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வைத்தீஸ்வரன் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா 2ம் அலையை கருத்தில் கொண்டு இந்த கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும், கோயில் ஊழியர்களை வைத்தே கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற உயர்நீதிமன்றம், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்றவும், விதிகள் மீறப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.