தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்ற அறிவிப்பால் சிக்கல் - ஒரே நேரத்தில் சான்று பெற குவிந்ததால் பரிசோதனை செய்வதில் சிரமம்
Apr 21 2021 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் கம்பம் அருகே, கேரளாவிற்கு ஏலத் தோட்ட பணிக்காக செல்லும் கூலித் தொழிலாளர்கள் ஒரேநேரத்தில் கொரோனா சோதனை செய்யக் குவிந்ததால், பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
தேனி மாவட்டத்திலிருந்து தினம்தோறும் சுமார் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு பணிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் இ-பாஸ் கொண்டு பணிக்கு சென்று வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா சோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் பெற, கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கேரளா செல்லும் கூலி தொழிலாளர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் பலர் குவிந்து வருவதால், அங்கு கொரோனா சோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.