வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பழுதால் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் - தமிழக மருத்துவக்கல்வி இயக்குநருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Apr 21 2021 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பழுதால் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக மருத்துவக்கல்வி இயக்குநர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும் குழாயில், மின் கோளாறு காரணமாக திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் கிடைக்காமல், அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, பிரேம், செல்வராஜ் உட்பட 7 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், தமிழக மருத்துவக்கல்வி இயக்குநர், மருத்துவக்கல்லூரி டீன் ஆகியோர், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.