செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என புகார் - ஆம்புலன்ஸ் வாகனத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்
Apr 21 2021 7:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் தொற்றுள்ள நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், கல்பாக்கம், மதுராந்தகம் ஆகிய பகுதியில் இருந்து வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என கூறப்படுகிறது.