காரைக்காலில் இயங்கி வரும் அரசு பள்ளியில் புத்தக நாள் விழா கொண்டாட்டம்
Apr 21 2021 7:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இயங்கி வரும் அரசு பள்ளி ஒன்றில் 500 புத்தகங்களைக் கொண்டு உலக புத்தக தினம் என்ற எழுத்து வடிவத்தை உருவாக்கி, பள்ளி மாணாக்கர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களின் அறிவு வளத்தை மேம்படுத்தவும், நல்ல சிந்தனைகளை வளர்க்கும் நோக்கிலும், அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டது. நூலக ஆசிரியர் ராஜலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து 500 புத்தகங்கள் கொண்டு உலக புத்தக தினம் என்ற எழுத்து வடிவத்தை உருவாக்கி அசத்தினர்.