தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் நாளைமுதல் நேரடி விசாரணை ரத்து - கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிப்பு
Apr 21 2021 7:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் நாளைமுதல் நேரடி விசாரணை ரத்து செய்யப்படுவதாகவும், ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-ம் அலையை கருத்தில் கொண்டு, நாளைமுதல், ஆணையத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில், காலை 10 மணிமுதல், பிற்பகல் 3 மணிக்குள் புகார் மனுவை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்அனுமதி பெற்றவர்கள், முகக்கவசம் அணிவதுடன், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.