சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா
Apr 21 2021 8:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 9 பேரை மீட்ட சுகாதாரத்துறையினர் அவர்களை சிகிச்சைக்காக ஆத்தூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.