நீச்சலில் தூத்துக்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உலக சாதனை
Apr 30 2021 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கை, கால்களைக் கட்டிக்கொண்டு 2 ஆயிரத்து 50 மீட்டர் தூரத்தை, 2 மணி நேரத்தில் நீச்சலடித்துக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளான்.
தூத்துக்குடியைச் சேர்ந்த திரு.இருதயராஜ் - திருமதி.அனிதா தம்பதியரின் மகனான அரிஸ்டோ பியோவுக்கு 6 வயது ஆகிறது. யுகேஜி படித்துவரும் இச்சிறுவனுக்கு நீச்சலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளான். 2 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி பெற்று வந்த அரிஸ்டோ பியோ, நீச்சலில் சாதனை புரிய திட்டமிட்டு, அதற்காக களத்தில் இறங்கினான். தூத்துக்குடியில் உள்ள நீச்சல் குளத்தில் கை, கால்களைக் கட்டிக்கொண்டு 2 ஆயிரத்து 50 மீட்டர் தூரத்தை, 2 மணி 19 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தான். இச்சிறுவனின் இந்தச் சாதனை குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.