தமிழத்திற்கான முதல் ஆக்சிஜன் சிறப்பு ரயில் மேற்குவங்கத்தில் இருந்து சென்னை வந்தடைந்தது - ஆக்சிஜன் தேவைப்படும் மாவட்டங்களுக்கு லாரி மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு
May 14 2021 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழத்திற்கான முதல் ஆக்சிஜன் சிறப்பு ரயில் மேற்குவங்கத்தில் இருந்து சென்னை வந்தடைந்தது.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சிறப்பு விரைவு ரயில்கள் மூலம் திரவ மருத்துவ ஆக்சிஜன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கான முதல் ஆக்சிஜன் ரயில் நேற்று இரவு சென்னை வந்தடைந்தது. மேற்குவங்கம் மாநிலம் தூர்காபூரில் இருந்து 4 கண்டெய்னர்களில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பட்ட வந்து அடைந்த விரைவு ரயில் சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இங்கிருந்து ஆக்சிஜன் தேவைப்படும் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.