ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது இன்றுமுதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டி
May 14 2021 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாநகராட்சியில் இன்றுமுதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்காக 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓரிரு தினங்களில் சென்னையின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.