தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை - சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாயை தாண்டியது
May 14 2021 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எரிபொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாயை தாண்டியது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனிடையே 5 மாநில தேர்தலின்போது மாற்றமில்லாமல் தொடர்ந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிவு அறிவிப்புக்கு பின்னர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 94 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 87 ரூபாய் 81 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.