ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் கொரானாவுக்கு 8 பேர் உயிரிழப்பு - பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் பீதி
May 14 2021 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் கொரானா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரானா நோய்த்தொற்றின் 2வது அலை வேகமாக பரவி தமிழகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 524 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 293 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்ட கொரொனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்து விட்டனர். நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்தால் பலி எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.