அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
May 14 2021 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண்டிமடம் அருகே உள்ள பாசி குளம் கிராமத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாக்குமூட்டையில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கருப்புசாமி, பகத்சிங், விக்னேஷ், சக்திவேல், ரஞ்சித் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் ஜெயங்கொண்டம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.