கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா தொற்று - 16 பேர் பலி
May 14 2021 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தொற்று காரணமாக ஆயிரத்து 479 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்குகிறது. சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. நாகர்கோவிலில் 20 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 31 இடங்களை கட்டுபடுத்தபட்ட பகுதிகளாக சுகாதார துறை அறிவித்துள்ளது.