ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் உண்டியல் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
May 14 2021 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அக்னி வீரபத்திர சுவாமி கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உண்டியலில் இருந்த 5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.