முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொரோனா நன்கொடை வழங்கும் திரைத்துறையினர் - நடிகர் சூர்யாவை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் 25 லட்சம் ரூபாயும், ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஒரு கோடி ரூபாயும் நன்கொடை
May 14 2021 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் குமார் 25 லட்சமும், செளந்தர்யா ரஜினிகாந்த் 1 கோடி ரூபாயும் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பேரிடரை ஒட்டி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் குமார் 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். நடிகர் அஜித் இரண்டரை கோடி ரூபாய் வழங்கியதாக தமிழக அரசு தகவல் வெளியிட்ட நிலையில், அவர் 25 லட்சம் ரூபாய் வழங்கியதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொகை வங்கிப்பரிவர்த்தனை மூலம் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தனது நிறுவனத்தின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.