தமிழகத்தில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் - சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி
May 14 2021 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திற்கு 5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என சுகாதாரதுறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெம்டிசிவர் மருந்து இருந்தால் மட்டுமே கொரோனா நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்ற பொய்யான தோற்றத்தை சில மருத்துவர்கள் உருவாக்கி வருவது வருத்தமளிப்பதாக கூறினார்.