ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதத்தால் இருதரப்பினர் இடையே மோதல் - வீடுகள் சூறையாடப்பட்டு வாகனங்களுக்கு தீ வைப்பு
Jun 18 2021 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, முன்விரோதத்தால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், வீடுகள் சூறையாடப்பட்டு, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பரமக்குடி தாலுகாவுக்குட்பட்ட பாண்டியூர் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை மற்றும் முத்துராமலிங்கம் இடையே, ஊராட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. முத்துராமலிங்கம் தரப்பினர், சாமிதுரையின் சகோதரார் ராஜா மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை தரப்பினர், முத்துராமலிங்கம் வசிக்கும் பகுதிக்கு சென்று, அங்கிருந்த 2 கார்கள், 2 டிராக்டர்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை எரித்ததுடன், முனியாண்டி, தமிழரசன், முத்துராமலிங்கம் உட்பட 8 பேரின் வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 9 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.