திருமணம் செய்வதாகக்கூறி நடிகையை ஏமாற்றிய விவகாரம் - முன்னாள் அமைச்சர் மணிகண்டனைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
Jun 18 2021 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
திருமணம் செய்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் அளிக்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் சிக்னல்-ஐ வைத்து தேடுதல் வேட்டை நடைபெற்ற போது மணிகண்டன் அதனை தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாகவும், அவரது உதவியாளர் மூலமாகவே செல்போன் கொண்டு பலரையும் தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரியவந்திருக்கிறது
இதில் ஒரு தனிப்படை, மணிகண்டனை பிடிக்க மதுரை விரைந்துள்ளது. மற்றொரு தனிப்படையினர், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.