நாகையில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து - மின் தளவாட பொருட்கள், முக்கிய கோப்புகள் எரிந்து சேதம்
Jun 18 2021 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மின் தளவாட பொருட்கள் மற்றும் முக்கிய கோப்புகள் எரிந்து சேதமடைந்தன.
நாகை வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள உதவி மின் பொறியாளர் கட்டடம் பழுதடைந்ததால், அண்மையில் அருகிலுள்ள சூர்யா நகருக்கு அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பூட்டிக்கிடந்த உதவி மின் பொறியாளர் அலுவலகம் தீப்பிடித்து, புகைமூட்டம் வருவதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தால் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இருந்த மின் தளவாட பொருட்கள் மற்றும் முக்கிய கோப்புகள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வெளிப்பாளையம் போலீசார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.