பாமக பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய புகாரில் 8 பேர் மீது திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு
Jun 18 2021 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாமக பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய புகாரில் அதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் மீது திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை அருகே உள்ள மருத்துவக்குடியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ம.க. ஸ்டாலினின் தம்பி ம.க. ராஜா என்பவரை, மணிகண்டனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், மணிகண்டனின் நண்பர்கள் என்பதும், பா.ம.க. பிரமுகர் ஸ்டாலினை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.