தொண்டர்களை எப்போதும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது - கழகத்தினருடனான தொலைபேசி உரையாடலில் சின்னம்மா உறுதி
Jun 18 2021 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தியாகத்தலைவி சின்னம்மா, கழகத் தொண்டர்களுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருவது கழகத்தினர் மத்தியில் புதிய எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அ.இ.அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்க வருமாறு சின்னம்மாவுக்கு தொண்டர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
சின்னம்மாவுக்கு கழகத் தொண்டர்கள், தொடர்ந்து கடிதங்கள் எழுதிவரும் நிலையில், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களது நலன் குறித்து விசாரித்து வருகிறார். திருவண்ணாமலை அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு. அர்ஜுனனுடன், தியாகத்தலைவி சின்னம்மா நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.