சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது
Jun 18 2021 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடிபோதையில் மோதலில் ஈடுபட்ட கஞ்சா விற்பனை செய்யும் பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். போஜராஜன் நகரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவர் அப்பகுதியில் உள்ள அந்தோணி என்பவருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்க கஞ்சா வியாபாரி கஜா என்னும் கஜலட்சுமி, உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து கத்தி மற்றும் கட்டைகளைக் கொண்டு மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.