பிரமிக்க வைக்கும் 2 வயது குழந்தையின் நினைவாற்றல் - இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து சாதனை
Jun 25 2021 10:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ராயபுரத்தில் 2 வயது குழந்தையின் நினைவாற்றலுக்கு அங்கீகாரமாக, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம்பிடித்திருப்பது, பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரத்தைச் சேர்ந்த ராகுலன் - ஜீவிதா தம்பதியரின் 2 வயது குழந்தை கிரிஷாவ் சாயின் நினைவாற்றால் பலரையும் பிரமிக்க வைக்கிறது. தேசியக்கொடிகள், தேசியப் பறவைகள், விலங்குகள், உணவு மற்றும் காய்கறிகளின் பெயர்களை நொடிப்பொழுதில் குழந்தை கூறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நினைவாற்றலை அங்கீகரித்து, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவேற்றி, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.