கொடைக்கானலில் தோப்புக்கரணம் போட்டு பள்ளி மாணவர் சாதனை - பதக்கம், சான்றிதழ் வழங்கி ஏசியா புக் நிறுவனம் பாராட்டு
Jun 29 2021 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவர் ஒருவர் தோப்புகரணத்தில் சாதனை படைத்து ஏசியா புக் நிறுவனத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
கொடைக்கானலில் தனியார் பள்ளி பயின்று வரும் 12−ம் வகுப்பு மாணவர் பிரசன்னா 13 வயதிலிருந்தே தோப்புக்கரணம் செய்து வருகிறார். இதன் மூலம் கடந்த 2017ம் ஆண்டு அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு 82 முறை தொடர்ந்து தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்ததற்கக கடந்த 2020ம் ஆண்டு இந்தியா புக் நிறுவனம் பத்தக்கம் வழங்கி பிரசன்னாவை பாராட்டியது. இந்நிலையில், தற்போது, நிமிடத்திற்கு 88 தோப்புக்கரணம் போட்டு அவரது சாதனையே அவரே முறியடித்துள்ளார். இதற்காக ஏசியா புக் நிறுவனம் சாதனை மாணவர் பிரசன்னாவை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது.