அறிவியலில் 100 வார்த்தைகளை இரண்டே நிமிடங்களில் கூறும் தூத்துக்குடி சிறுவன் - இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை
Jul 21 2021 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அறிவியலில் பயன்படுத்தப்படும் 100 வார்த்தைகளை இரண்டே நிமிடங்களில் கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
தூத்துக்குடி வி.எம் கோயில் தெருவைச் சேர்ந்த சங்கர்ராஜ்-மாரீஸ்வரி தம்பதிகளின் மகன் சார்விக் சரண், 2-ம் வகுப்பு பயின்று வருகிறான். கடந்த ஆண்டு இச்சிறுவன் கந்த சஷ்டி கவசத்தை 13 நிமிடங்களில் கூறி, கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தான். இந்த ஆண்டு புதிய முயற்சியாக, அறிவியல் சார்ந்த 100 பெயர்களை இரண்டே நிமிடங்களில் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறான். இதற்கு அங்கீகாரமாக, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் சிறுவன் சார்விக் சரண் இடம் பிடித்துள்ளான்.