வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தரைப்பாலங்கள் மூழ்கின - கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
Jul 31 2021 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. அணை நிரம்பியதன் காரணமாக அணைக்கு வரும் ஆயிரத்து 750 கனஅடி தண்ணீர், அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நேற்று மதுரை நகருக்கு வந்தது. வைகை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால், யானைக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் குருவிக்காரன் சாலை அருகே உள்ள தற்காலிக பாலம் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி இருச்சக்கர வாகனங்களில் அத்துமீறி செல்வோரையும், ஆற்றில் வாகனங்களை சுத்தம் செய்வோரையும், செல்பி எடுக்க வருவோரையும் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.