திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
Jul 31 2021 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை இரும்பிக் கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவனுக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நன்னிலத்தையடுத்த காக்காகோட்டூரைச் சேர்ந்த ஜெயபால் என்பவர், கடந்த 2018-ஆம் ஆண்டு வரதட்சணைக் கேட்டு, மனைவி இந்திராவை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, மனைவியை கொலை செய்த ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி திரு.சுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.