தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
Jul 31 2021 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடை பிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வரை தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.