கொரோனா கண்டறியப்படுவோருக்கு இனி வீட்டு தனிமையில் சிகிச்சை இல்லை - மருத்துவமனையிலேயே சிசிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
Jul 31 2021 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் இனி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் வீட்டு தனிமையில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்றதன் காரணமாகவே அங்கு கொரோனா பரவல் அதிகரித்ததாகவும், எனவே, தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று கண்டவுடன், அனைவரும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.