சிதம்பரத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது பாதுகாத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு
Jul 31 2021 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்குப் பருவமழையின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தனர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மழைக்காலங்களில் பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களை எப்படி மீட்பது? - எவ்வாறு முதலுதவி செய்வது? என்பது குறித்தும், இடி, மின்னல் ஏற்படும்போது பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.