சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீட்டுக்கே சென்று மதுபாட்டில் விற்ற நபர் கைது - 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
Jul 31 2021 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஆத்தூரில், வீட்டிற்கே சென்று மதுபாட்டில் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் பகுதியில், தொலைபேசி வாயிலாக ஆர்டர் செய்தால் வீட்டிற்கே சென்று மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் தென்னங்குடிபாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரிடன் விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆர்டரின் பேரில் மதுபாட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து முருகன் என்னும் அந்த நபரைக் கைது செய்த போலீசார், 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.