வியாசர்பாடியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்
Jul 31 2021 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.ம.மு.க. வடசென்னை மத்திய மாவட்டம், பெரம்பூர் பகுதி கிழக்கு 46-வது வட்டக் கழகம் சார்பில், வியாசர்பாடியில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தியாகத்தலைவி சின்னம்மா, விரைவில் பங்கேற்க உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வரவேற்பு அளிப்பது, கழக வளர்ச்சிப் பணிகள், நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளர் திரு.ஏ.ஆர். பழனி, புரட்சித்தலைவி அம்மா தொழிற்சங்க பேரவை மாநிலத்தலைவர் வியாசர்பாடி திரு.ராஜ், பகுதிக் கழகச் செயலாளர் திரு.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.