கொல்லிமலையில் அன்னாசி, பலா விளைச்சல் அமோகம் - சுற்றுலாப் பயணிகள் வராததால் பழங்கள் விற்பனை பாதிப்பு
Jul 31 2021 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடைக்காலத்தில் சுற்றுலாத்தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், கொல்லிமலை பகுதியில் விளையும் பழங்களின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொல்லிமலை பகுதியில் பலா, அன்னாசி பழங்கள் அதிக விளைச்சல் கண்டுள்ளன. தற்போது கொரோனா தடைக்காலம் என்பதால், சுற்றுலா பயணிகள் யாரும் வராததால், பழங்கள் விற்பனையாகாமல் மலைவாழ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.