புதுச்சேரியில் வியக்க வைக்கும் 3 வயது சிறுவனின் நினைவாற்றல் - கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பெற்று அசத்தல்
Aug 2 2021 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் நினைவாற்றல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம், சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் - லட்சுமி நாராயணி தம்பதியரின் மகன் யாஸ்வின், 2 வயதுமுதலே அதிக ஞாபகத்திறனுடன் இருந்து வருகிறார். தற்போது 3 வயதை கடந்துள்ள நிலையில், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பெற்றுள்ளார். உலக நாடுகளின் தேசியக்கொடிகள், தலைநகரம், விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்கள் என 250 பெயர்களை ஒரே நேரத்தில் கூறி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.