சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தினார் நடிகர் விஜய் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Sep 17 2021 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் விஜய், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை ரத்து செய்யக்கோரிய வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவு மற்றும் விமர்சனங்களை நீக்கக்கோரி விஜய் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், விஜய் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீதத்தை செலுத்த உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்தியுள்ளார்.