கொரோனா அச்சத்தால் 7 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்லாவரம் வாரச்சந்தை இன்று திறப்பு - கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வருகை தரும் வாடிக்கையாளர்கள்
Sep 17 2021 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த சென்னை பல்லாவரம் சந்தை, 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை பல்லாவரத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில், குண்டூசி முதல் குளிர்சாதன பெட்டி வரை, வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், பழைய பொருட்கள் தேவையெனில், இங்கு வந்தால் வாங்கிச் செல்லலாம். இதை தவிர, பூச்செடிகள், காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.வெள்ளிக்கிழமை தோறும், 500க்கும் அதிகமான கடைகள் அமைக்கப்பட்டு, சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் இங்கு பொருள்களை வாங்கி செல்வர். இதனால் காலை முதல் இரவு வரை, திருவிழா போன்று வாரச் சந்தை காட்சியளிக்கும்.
இந்த அளவிற்கு சிறப்பு மிக்க இந்த வாரச்சந்தை, கொரோனா பரவல் காரணமாக, கட;நத நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் சந்தை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பல்லாவரம் சந்தை மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.