தந்தை பெரியார் பிறந்த நாள் - நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அவரது திருவுருவச் சிலைக்கு அ.ம.மு.க. சார்பில் மரியாதை
Sep 17 2021 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் 143 ஆவது பிறந்தநாளையொட்டி,பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் நெல்லை திரு. பரமசிவம் தலைமையில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாளையங்கோட்டை பகுதி கழக செயலாளர் திரு.டி. ரமேஷ், துணைச் செயலாளர் திரு.நயினார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.