கொரோனா காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை
Sep 17 2021 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பள்ளிகள் ஈடுபடக்கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என கூறினார். முகக்கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகமே அதனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கொரோனா காலத்தை பயன்படுத்தி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.