அரசு பேருந்தை ஆக்ரோஷத்துடன் தாக்க வந்த காட்டு யானை - மசினகுடி வனப் பகுதியையொட்டிய நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம்

Sep 17 2021 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் மசினகுடியில், வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, அரசு பேருந்தை ஆக்ரோஷத்துடன் தாக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மசினகுடியில் இருந்து மாயார் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. அப்போது, மசினகுடியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் வனப் பகுதியில் இருந்து திடீரென ஓடி வந்த ஒற்றை யானை, அரசு பேருந்தை தாக்க முயற்சித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், பதற்றத்தில் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டார். பேருந்தை நோக்கி ஓடிவந்த அந்த யானை, பேருந்தின் முன் சிறிது நேரம் நின்றுவிட்டு பின்னர் சாலையோரமாக சென்றது. பேருந்தில் இருந்த பயணிகள், வாகனத்தை இயக்குமாறு சத்தம் எழுப்பியதால், ஓட்டுநர் மீண்டும் வாகனத்தை இயக்கி, மாயார் நோக்கி ஓட்டிச் சென்றார். பயணி ஒருவரால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல், சேரம்படி பஜார் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் நேற்றிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்குள்ள ஒரு வீட்டின் சமையலறைக்குள் சென்று பொருட்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டை தடுப்பு காவலர்கள், நேரில் சென்று, பட்டாசு வெடித்து, 3 மணி நேரம் போராடி, யானையை வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00