தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின்போது 2 வடமாநிலத் தொழிலாளர்கள் பலி - நியாயம் கேட்டு அ.ம.மு.க-வினர் ஆர்ப்பாட்டம்
Sep 17 2021 2:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின்போது மண் சரிந்து இரண்டு வடமாநில தொழிலாளர்கள் பலியானதை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது மண் சரிந்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் நேற்று பலியாயினர். உயிரிழந்தவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒப்பந்தக்காரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் கவனக் குறைவின் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டிம், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும் அ.ம.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், உயிரிழந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.