தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில் திருவுருவச் சிலைக்கு மரியாதை
Sep 17 2021 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில், திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில், திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவசிலைக்கு, கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. இ.மகேந்திரன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் வைரவன் மாவட்ட கழக, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், சார்பு அணி, ஊராட்சி கழக, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.