தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் திருவுருவப் படத்திற்கு மரியாதை
Sep 17 2021 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில், அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளையொட்டி, தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சார்பில், தொம்பன் குடிசை பகுதியில் உள்ள பூசந்தை பகுதியில், அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் உருவ படத்திதிற்கு, தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் திரு. ப.ராஸேஸ்வரன், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு. வேலு.கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் திரு.விருத்தாசலம், தஞ்சாவூர் மாநகர் மத்திய ஒன்றிய செயலாளர் முஐ என்.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.