திருப்பூரில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி பதிவுக
Sep 17 2021 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் 6 வயது சிறுவனை ஐந்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து குதறும், பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் தெற்குதோட்டம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது ஆறு வயது மகன் பிரகதீஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பிரகதீஸ் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஐந்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிரகதீசை கடித்து குதறியவாறே தூக்கி சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள், தெரு நாய்களை துரத்தியடித்து சிறுவனை மீடு திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு பிரகதீசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், தெருவில் விளையாடும் சிறுவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிப்பதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மீண்டும் யாரேனும் பாதிக்கப்படுவதற்குள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.