தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் பேச்சுப் போட்டி
Sep 17 2021 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் இன்று நாகர்கோவிலில் தொடங்கியது. சமூக நீதி காக்க பெரியார் வழி நடப்போம் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு நெறிமுறைகளின் காரணமாக சேலம், தஞ்சை, காரைக்குடி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவியர்கள் தங்கள் படைப்புகளை காணொளி மூலம் அனுப்பி உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ராகவன், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ரவி, பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் திரு.மில்லர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் திரு. சகாயடெல்வர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.