டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு - தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Sep 17 2021 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கு தொடர்பாக உரிய விளக்கம் தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணியிடத்துக்கான தேர்வுக்கு விண்ணபிக்க ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயமில்லை என்ற தீர்ப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை 23-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.