செல்லூர் ராஜூவின் விஞ்ஞான திறமை உலகமறிந்தது -நிதியமைச்சர்
Sep 17 2021 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் அமைச்சர் திரு.செல்லூர் ராஜூவின் விஞ்ஞான திறமை உலகமறிந்தது என நிதியமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடைபெறும் வேளையில் திரு.செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். ஜி.எஸ்.டி கூட்டத்திற்கான அழைப்பு தாமதமாக வந்ததால் அதில் பங்கேற்க இயலவில்லை எனவும், தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளதாகவும் திரு.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.