திருச்செங்கோட்டில் கல்லூரி விடுதியில் மயங்கி விழுந்த பொறியியல் மாணவர் மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

Sep 17 2021 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செங்கோட்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த மாணவன் ஒருவர், கல்லூரி விடுதியில் மயங்கி விழுந்து மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த துரைசாமி - லாவண்யா தம்பதியரின் மகனான அருண்குமார், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர், தந்தை துரைசாமியிடம் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக்‍ கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், ஆம்புலன்சில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அருண்குமாரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். அருண்குமார் கடந்த 2 நாட்களாக நெஞ்சு வலிப்பதாக சக நண்பர்களிடம் கூறிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்‍கது. மாணவர் அருண்குமாரின் மறைவு அவரது குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00