தமிழக அரசின் மக்கள் விரோதபோக்கிற்கு கண்டனம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி குடியிருப்புவாசிகள் போராட்டம்
Sep 17 2021 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடிப்படை வசதிகளை செய்து தராத தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி பார்க் பகுதிவாசிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை புளியந்தோப்பில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கே.பி. பூங்கா குடியிருப்புகளில் 864 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் தண்ணீர், லிஃப்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படாததால் அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அவதியுறுகின்றனர். தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரியும், எந்த விளக்கமும் அளிக்காமல் தங்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கத்தை கேட்கும் தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் கே.பி. பூங்கா குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.